ஜெயில் அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

1892பார்த்தது
ஜெயில் அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு
திருச்சி மத்திய ஜெயில் தலைமை ஜெயில் வார்டனாக இருப்பவர் திருமுருகன். இவர் அங்குள்ள ஜெயில் காவலர்களுக்கான குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நள்ளிரவு அவரது வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் ரூ. 1500 பணத்தை திருடிக் கொண்டு தப்பிச் சென்றனர். அப்போது அருகில் வசிக்கும் ஜெயில் காவலர் அருண்குமார் என்பவரது மனைவி மற்றும் குழந்தைகள் சப்தம் கேட்டு எழுந்துள்ளனர். அதற்குள்ளாக கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர் இது குறித்து கே கே நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி