திருவானைக்காவல் அருகே மீண்டும் பள்ளம் - வீடியோ

4674பார்த்தது
திருவானைக்காவல் காந்தி ரோடு மேம்பாலம் ஏறும் சாலையில் கடந்த 10ம் தேதி சாலையில் அடியில் செல்லும் டிரைனேஜ் பெரிய குழாய் உடைந்து மண் அரிப்பு ஏற்பட்டது. இதனால் அதிலிருந்து வெளியேற்றும் தண்ணீர் வேகம் அதிகரித்து அடியில் மண்ணெரிப்பு ஏற்பட்டு பள்ளம் உண்டானது. அதே பகுதியில் மீண்டும் இன்று காலை 7 மணி அளவில் நடுரோட்டில் திடீரென்று பள்ளம் ஏற்பட்டது. இந்த பள்ளத்தினால் அப்பகுதியில் போக்குவரத்து போலீசாரால் நிறுத்தப்பட்டுள்ளது.

ரீரங்கம் பகுதிக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் அம்மா மண்டபம் பகுதி வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. இந்த பள்ளம் காலை 7 மணிஅளவில் ஏற்பட்டுள்ளது. இந்தப் பள்ளம் ஏற்படும் போது போக்குவரத்து இல்லாத காரணத்தால் விபத்துகள் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த பள்ளத்திற்கான காரணம் முன்பு ஏற்பட்டதை போல இருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது இந்த பள்ளத்தை ஜேசிபி எந்திரம் மூலம் பள்ளத்தை அகலப்படுத்தி டிரைனேஜ் குழாயை சீரமைக்கு பணியில் மாநகராட்சி ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணி முடிய சுமார் பல மணி நேரத்திற்கு மேலாகும் என்று தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி