மணப்பாறையில் செயின் பறிக்க முயன்ற வாலிபருக்கு தர்ம அடி

74பார்த்தது
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மணப்பாறைப்பட்டி சாலையில் இன்று காலை அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் நடந்து சென்ற போது அவர் கழுத்தில் அணிந்திருந்த செயினை வாலிபர் ஒருவர் பறிக்க முயன்றுள்ளார். அப்போது அவரை பிடித்த பொதுமக்கள் மின்கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். மேலும், காயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த விபரம் அறிந்த மணப்பாறை போலீசார் அந்த வாலிபரை கைது செய்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி