தேர்தல் ஆணையருக்கு திருமாவளவன் கடிதம்

76பார்த்தது
தேர்தல் ஆணையருக்கு திருமாவளவன் கடிதம்
நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விவரங்களை 24 மணி நேரத்துக்குள் வெளியிட வேண்டும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கடிதம் அனுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் படிவம் 17C இல் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர் எண்ணிக்கையை வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறோம். தேர்தல் ஆணையம் தனது கடமையை நியாயமான முறையில் நிறைவேற்றி, இந்திய அரசமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பைப் பாதுகாக்கும் என்று நாங்கள் உண்மையாக நம்புகிறோம். என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி