சென்னை திரு.வி.க நகரிலிருந்து விவேகானந்தர் இல்லம் நோக்கி சென்று கொண்டிருந்த மாநகர பேருந்தின் மேற்கூரையில் ஏறி கல்லூரி மாணவர்கள் ரகளை செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மாணவர்கள் செய்த அராஜகத்தால் டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் அந்த பகுதிக்கு போலீசார் வந்த நிலையில், மாணவர்கள் அங்கிருந்து சிதறி ஓடினர். இந்த சம்பவம் குறித்து சிந்தாதிரிப்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.