திருச்சியில் நடமாடும் நீர்மோர் வாகனம் தொடங்கி வைப்பு

80பார்த்தது
திருச்சியில் நடமாடும் நீர்மோர் வாகனம் தொடங்கி வைப்பு
தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அந்த வகையில் திருச்சி மாவட்டத்திலும் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. வெயிலை சமாளிக்க பொதுமக்கள் நீர்மோர், இளநீர், நுங்கு போன்ற பானங்களை பருகி வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்களின் வசதிக்காக வழக்கம் போல் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாவட்டத்தின் பல பகுதிகளில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல் திறந்து வருகின்றனர். அந்தவகையில் திருச்சி நூன் அறக்கட்டளை சார்பில், திருச்சியில் மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் நீர் மோர் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து திருச்சி மாரீஸ் திரையரங்கம் அருகே உள்ள ஈத்கா பள்ளிவாசலில் இருந்து நடமாடும் நீர்மோர் வாகனம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி