தமிழகத்தில் வருகிற 19 ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக நடைபெற உள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூட வேண்டும் என சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளதால் இன்று மாலை 6 மணி வரை மட்டுமே பரப்புரை செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியது.
இந்த நிலையில் இன்று வேட்பாளர் இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
அதிமுக சார்பில் வேட்பாளர் கருப்பையா தென்னூர் உக்கிர காளியம்மன் அருகே அதிமுக தேர்தல் பணிமனையில் இருந்து வாகன பேரணி மூலம் சென்று வாக்கு சேகரித்தார்.
அலுவலகத்தில் பேரணி தொடங்கி எம்ஜிஆர் சிலை , மன்னார் புரம், திருவெறும்பூர், ஆகிய பகுதிகளில் இரு சக்கர வாகன பேரணியாக சென்று சரியாக மாலை 6 மணிக்கு ஶ்ரீரங்கம் ராஜ கோபுரத்தில் பிரச்சாரத்தை முடித்தனர்.
இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன், முன்னாள் எம்பி குமார் அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்