கோடி கணக்கில் வரி செலுத்தாமல் சுதந்திரமாக உள்ள ராதிகா.. ஆனால்

63பார்த்தது
கோடி கணக்கில் வரி செலுத்தாமல் சுதந்திரமாக உள்ள ராதிகா.. ஆனால்
விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ராதிகா தாக்கல் செய்த வேட்புமனுவில் சுமார் 6 கோடியே 54 லட்சம் ரூபாய்க்கு மேலும், அவரது கணவர் சரத்குமார் 8 கோடியே 48 லட்சம் ரூபாய்க்கு மேலும் வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்திருப்பதை சுட்டிக்காட்டி ராதிகா போன்றோர் வரி நிலுவை தொகையை செலுத்தாமல் சுதந்திரமாக உள்ளனர், அதே நேரத்தில் பல சிறு குறு தொழில் முனைவோர் ஜிஎஸ்டி அதிகாரிகளின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி போராட்டங்களுக்கு மத்தியில் தொழில் செய்து வருகின்றனர் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி