ஆடு திருடியதாக இளைஞர் கைது

1568பார்த்தது
திருட்டு வழக்கில் இளைஞர் கைது


முசிறி கீழத்தெருவை சேர்ந்த கணேசன் மகன் சிவானந்தம் (44), இவரது வீட்டில் கட்டப்பட்டிருந்த ஆடு திருடு போனதாக ஜனவரி மாதம் 31ஆம் தேதி முசிறி காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் முசிறி போலீஸார் வழக்கு பதிந்தது விசாரணை மேற்கொண்டதில் தொட்டியம் அருகேயுள்ள அலகரை அடுத்த அரியனாம்பட்டை சேர்ந்த மகாமுனி மகன் அஜித்குமார் (24) மற்றும் திருஈங்கோய்மலை சாலியர் தெரு சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் வேல்முருகன் (22) ஆகியோர் திருடியது தெரிந்து, அப்போது (பிப்ரவரி மாதம்) அஜித்குமாரை கைது செய்து, வழக்கில் மூன்று மாதங்களாக தலைமறைவாக தேடப்பட்டு வந்த வேல்முருகனை தற்போது போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி