காதல் விவகாரம் - மாப்பிள்ளை மீது திராவகம் வீசிய பெண்

79பார்த்தது
காதல் விவகாரம் - மாப்பிள்ளை மீது திராவகம் வீசிய பெண்
உத்தரப் பிரதேச மாநிலம் பால்லியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராகேஷ் பிந்த் (26). இவருக்கு சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது, அதே ஊரைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர், கழிவறைக்குப் பயன்படுத்தும் திராவகத்தை ராகேஷ் மீது வீசினார். இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, அப்பெண்ணை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில், தன்னை காதலித்து வந்த ராகேஷ், தற்போது வேறு பெண்ணை திருமணம் செய்ய இருப்பதால் ஆத்திரத்தில் இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி