முசிறி அருகே சாலை விபத்தில் முதியவர் பலி

71பார்த்தது
முசிறி அருகே நேரிட்ட சாலை விபத்தில் சிகிச்சை பெற்ற முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் முசிறி அருகேயுள்ள சுக்காம்பட்டி மேற்குடி தெரு சேர்ந்த தம்பி கிழான் மகன் தங்கராசு (74), இவர் மிதிவண்டியில் முசிறி புலிவலம் சாலையில் உள்ள தண்டலை கிராமம் முடக்கு சாலை பகுதியில் சென்றபோது அவ்வழியாக வந்த கார் மோதி காயமடைந்தவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக முசிறி போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி