சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா

81பார்த்தது
முசிறி நகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி.


முசிறி நகராட்சி அலுவலகத்தில் நகராட்சிக்குட்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை மற்றும் விற்பனைச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் கிருஷ்ணவேணி தலைமை வகித்து அடையாள அட்டை மற்றும் சான்றிதழை வழங்கினார். அப்போது சான்றிதழ் பெறும் வியாபாரிகளுக்கு வங்கிகள் மூலம் கடன் பெற உதவி செய்து அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றப்படும் என தெரிவித்தார். இந்நிகழ்வில் நகராட்சி பொறியாளர் சம்பத்குமார். , நகரமைப்பு ஆய்வாளர் நேதாஜி மோகன் நகராட்சி அலுவலக பணியாளர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
50 சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி