இருசக்கர வாகனங்கள் மோதல்: கார் ஓட்டுநர் உயிரிழப்பு

3305பார்த்தது
மணப்பாறை அருகே வையம்பட்டி ஒன்றியம் வைரம்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த உருமவேளாளர் மகன் சுரேந்திரன் (38). கார் ஓட்டுநர். இவர் சம்பவத்தன்று தனது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பி கொண்டிருந்தார். அப்போது வடக்கு அம்மாபட்டி அருகே சென்ற போது முன்னால் சென்ற இருசக்கர வாகனம் திடீரென்று நிறுத்தியதால் சுரேந்திரன் சென்ற வாகனம் முன்னால் நின்ற வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயமடைந்த சுரேந்திரன் ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனெவே அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற வையம்பட்டி போலீஸார் சுரேந்திரன் உடலை கைப்பற்றி
உடற்கூறாய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் முன்னால் சென்ற இரு சக்கர வாகனத்தில் சென்ற திருச்சி துவாக்குடி மலை பிச்சைக்குமார் மனைவி லெட்சுமி(48) காயமடைந்த நிலையில் வையம்பட்டி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். வையம்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

தொடர்புடைய செய்தி