திடீரென காரில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு

52பார்த்தது
திருச்சி மாவட்டம் மணப்பாறை எடத்தெருவை சேர்ந்த நாகராஜன்(45). இவர் புத்தாநத்தம் அருகே இடையப்பட்டியில் உள்ள தனியார் வங்கி ஊழியர் ஆவார். இந்நிலையில் இவர் இன்று இவரது காரை ஓட்ட சாவியை போட்ட போது தீ பற்றி விபத்து ஏற்பட்டது. இதையறிந்த மணப்பாறை தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் கால்நடைகளுக்கோ மனிதர்களுக்கோ எவ்வித தீக்காயமும் இல்லை. இது குறித்து மணப்பாறை போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி