பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை தேனியில் கைது செய்து கோவைக்கு போலீசார் அழைத்துச் சென்ற போது நடந்த காவல்துறை வாகன விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் சவுக்கு சங்கர் அடைக்கப்பட்டுள்ளார். சவுக்கு சங்கரை அழைத்துச் சென்ற காவல்துறை வாகனம் தாராபுரம் அருகே எதிரே வந்த காருடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து திட்டமிட்ட செயலா? என்ற சந்தேகத்தை எழுப்பும் வகையில், அதன் சிசிடிவி காட்சிகள் அமைந்துள்ளன.