கோவில் திருவிழாவில் வசமாக சிக்கிய திருடன்

5843பார்த்தது
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வீரப்பூர் பெரிய காண்டி அம்மன் கோவிலில் மாசி பெருந்திருவிழா கடந்த 9ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான படுகளம் சாய்தல் பின்னர் எழுப்புதல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று வேடபுரி நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்க மணப்பாறையை சேர்ந்த மரியஜோசப் குடும்பத்துடன் வந்திருந்தார்.

அப்போது தஞ்சாவூரை சேர்ந்த பிரபாகரன் என்பவர் மரிய ஜோசப் பாக்கெட்டில் வைத்திருந்த 500 ரூபாயை திருடி கொண்டு ஓட முயற்சித்தார். அப்போது அவரை கையும் களவுமாக பிடித்த மரியஜோசப் மணப்பாறை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அதனை தொடர்ந்து மணப்பாறை போலீசார் பிரபாகரனிடம் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி