கத்தி முனையில் பணம் பறித்த மூன்று பேர் கைது

53பார்த்தது
கத்தி முனையில் பணம் பறித்த மூன்று பேர் கைது
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள கூத்தூர் பணமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜன். இவர் சமயபுரம் பெருமுலை வாய்க்கால் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மூன்று மர்ம நபர்கள் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டிய அவர் சட்டை பையில் வைத்திருந்த 500 ரூபாய் பணத்தை பறித்து சென்றனர்.

இதுகுறித்து வரதராஜன் மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இதில் வரதராஜனிடம் பணப்பரிப்பில் ஈடுபட்ட எஸ். கண்ணனூரைச் சேர்ந்த அமானுல்லா, வடக்குபட்டியைச் சேர்ந்த பிச்சைமுத்து, கல்பாளையத்தைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி