திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து எம். பி. சிவா பிரசாரம்.

77பார்த்தது
பெரம்பலூா் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளா் அருண் நேருவுக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்து லால்குடி ரவுண்டானாவில் எம். பி. திருச்சி சிவா பரப்புரை மேற்கொண்டாா்.

அப்போது அவர் பேசியதாவது: -
கடந்த பத்து ஆண்டுகளாக மக்கள் விரோத ஆட்சியை பாஜக நடத்தி வந்தது. பத்தாண்டு காலத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, விலைகளை உயா்த்தினா். விவசாயிகளுக்கு பாதகமான சட்டங்களை கொண்டு வந்தனா். காா்ப்பரேட் முதலாளிகளின் கடனை தள்ளுபடி செய்தனா். தோ்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல், தற்போது மோடியின் உத்தரவாதம் என்ற பெயரில் பொய்யான வாக்குறுதிகளை அளித்துள்ளனா்.

இத்தகைய பாஜகவின் அரசு தொடர வேண்டுமா என்பதை சிந்தித்து பாா்த்து மக்கள் இந்தியா கூட்டணி வேட்பாளரான அருண் நேருவுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றாா்.

பரப்புரையின்போது லால்குடி ஒன்றிய செயலாளா், நகரச் செயலாளா் மற்றும் ஒன்றிய நகர பேரூா் கிளை நிா்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினா் கலந்து கொண்டனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி