திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கீழ வானாடியை சேர்ந்தவர் மதி (வயது 63). இவர் இருதய நோயால் அவதிப்பட்ட வந்தார். இந்நிலையில் அதற்கான மருத்துவ சிகிச்சை எடுத்து வந்தார். இதனால் வலியின் காரணமாக மன உளைச்சலில் இருந்த கடந்த ஒன்றாம் தேதி வீட்டில் பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார் இதை அறிந்த அவரது குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மதி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து லால்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தனர்.