அர்ச்சகர் தட்டு காணிக்கை சுற்றறிக்கை - அமைச்சர் விளக்கம்

அர்ச்சகர் தட்டு காணிக்கை குறித்த சுற்றறிக்கை வெளியான நிலையில் அமைச்சர் சேகர் பாபு விளக்கம் கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, "அர்ச்சகர்கள் பணி வரன்முறை செய்யப்படவில்லை, பிறகு பணி வரன்முறை செய்யப்பட்டது. பக்தர்களிடம் இருந்து வரக்கூடிய காணிக்கையை உண்டியலில் போடும் சூழல் இருந்தது. அதில் ஏற்பட்ட சிறு பிரச்சனை காரணமாக தக்கார் அனுமதி பெறாமல் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். சுற்றறிக்கை தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது, பிரச்சனையும் முடிவுக்கு வந்துவிட்டது" என்றார்.