திருச்செந்தூா் தொகுதி மக்களுக்கு எம்.பி.கனிமொழி நன்றி

57பார்த்தது
திருச்செந்தூா் சட்டப் பேரவைத் தொகுதியில் கனிமொழி எம். பி. சுற்றுப் பயணம் மேற்கொண்டு வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் கனிமொழி எம். பி. இந்தியா கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டு இரண்டாவது முறையாக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். இதைத் தொடா்ந்து அவா் பல்வேறு பகுதிகளில் ஒவ்வொரு கட்டமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறாா்.

இந்நிலையில், திருச்செந்தூா் பேரவைத் தொகுதியில் நேற்று சுற்றுப்பயணம் செய்த அவா், நல்லூா், அம்மன்புரம், வள்ளிவிளை, பூச்சிக்காடு, காயாமொழி, நடுநாலுமூலைக்கிணறு, கீழ நாலுமூலைக்கிணறு, நா. முத்தையாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் நின்றவாறு வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசினாா்.

இந்நிகழ்ச்சியில், தமிழக மீன்வளம், மீனவா் நலன் - கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் டேவிட் செல்வின், தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தொடர்புடைய செய்தி