கோவை: செங்குட்டைபாளையத்தில் மாதவிடாய் ஏற்பட்ட மாணவியை பள்ளி வகுப்பறையில் அமர்ந்து தேர்வெழுத அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பொள்ளாச்சி கூடுதல் எஸ்.பி. சிருஷ்டி சிங் கூறுகையில், “மாணவியின் தாயார் தான் தனியாக உட்கார்ந்து தேர்வெழுத சொன்னதாக எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் தான் மாணவி தனியாக தேர்வு எழுத கோரினார். தொற்று ஏற்படலாம் என்பதால் இந்த கோரிக்கை வைத்தார்” என்றார்.