கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு அருகே இயங்கி வரும் பள்ளியில், மாதவிடாயை காரணம் காட்டி, மாணவியை ஆசிரியர் ஒருவர் வகுப்பறை வாசலில் அமர வைத்துள்ளது. இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த நிலையில், பள்ளியின் முதல்வர் ஆனந்தியை தற்காலிக பணிநீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இலவச கட்டாய கல்வி சட்டம் 2007- விதி 17 இன் படி தவறு என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.