மொபைல் வேன் பிரச்சார விழிப்புணர்வு

78பார்த்தது
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் மாண்புமிகு முதன்மை மாவட்ட நீதிபதி (பொறுப்பு) தாண்டவன் தலைமையில் மொபைல் வேன் பிரச்சார விழிப்புணர்வு நடைபெற்றது. முதலில் முதன்மை மாவட்ட நீதிபதி மொபைல் வேன் பிரச்சாரத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பிறகு பொதுமக்களுக்கு இலவச சட்ட உதவி சம்மந்தமாக துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. மேற்படி நிகழ்வில் நீதிபதி கள் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், காவல் துறையினர், வழக்காடிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். மேற்படி மொபைல் வேன் பிரச்சார நிகழ்வை தூத்துக்குடி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் (பொறுப்பு) பிஸ்மிதா, ஏற்பாடு செய்திருந்தார்.

தொடர்புடைய செய்தி