அரசு பஸ் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை!

2265பார்த்தது
அரசு பஸ் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை!
ஸ்ரீவைகுண்டம் அருகே அரசு விரைவு போக்குவரத்து கழக டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தன்னூத்து கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் சண்முகசுந்தரம் (55). இவர் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் கடந்த ஒரு மாத காலமாக வேலைக்கு செல்வது இல்லையாம். இதனால் அவரது மனைவி முத்துமாரி கண்டித்தாராம். இதன் காரணமாக மனைவியுடன் குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த சண்முகசுந்தரம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர பத்மநாப பிள்ளை வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்தி