குவைத் தீ விபத்து கடம்பூர் ராஜு எம்எல்ஏ ஆறுதல்!

2235பார்த்தது
குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வானரமூட்டி கிராமத்தைச் சேர்ந்த சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றிய ஊழியர் மாரியப்பன் உயிரிழந்தார்.. அவரது குடும்பத்திற்கு முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ. ராஜூ நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் குவைத்தில் உயிரிழந்த மாரியப்பன் உடலை மீட்டு விரைவில் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாரியப்பனை மட்டும் நம்பி இருந்த அவரது குடும்பம் மன வேதனையில் உள்ளனர். அந்த குடும்பத்திற்கு மத்திய, மாநில அரசுகள் அதிகளவு நிவாரண தொகை வழங்குவது மட்டுமின்றி போதுமான உதவிகளை செய்ய வேண்டும் என்றார்.

தொடர்புடைய செய்தி