இந்த வார ராசிப்பலன் ஆகஸ்ட் 7- 13 வரை!!

43912பார்த்தது
இந்த வார ராசிப்பலன் ஆகஸ்ட் 7- 13 வரை!!
வார ராசிப்பலன்- ஆடி 22 முதல் 28 வரை

மேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.
சிரிக்க சிரிக்க பேசி அனைவரையும் கவர்ந்திழுக்க கூடிய ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், 5-ல் புதன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். நெருங்கியவரின் உதவியால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். குரு, சனி வக்ர கதியில் இருப்பதால் தடைப்பட்ட சுப காரியங்கள் கைகூடக்கூடிய ஒரு வாய்ப்பு ஏற்படும். நீண்ட நாட்களாக உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் எல்லாம் குறைந்து சகல விதத்திலும் முன்னேற்றங்கள் உண்டாகும். ஜென்ம ராசியில் சஞ்சரிக்க கூடிய செவ்வாய் வரும் 10-ஆம் தேதி முதல் 2-ல் சஞ்சரிக்க இருப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்பட்டு எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு நல்ல லாபத்தை ஈட்ட முடியும். கூட்டாளிகளின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் தொழில் அபிவிருத்தி செய்ய முடியும். கடந்த கால பொருட் தேக்கங்கள் எல்லாம் விலகி சந்தை சூழ்நிலையும் உங்களுக்கு ஆதரவாக அமையும். நீங்கள் எதிர்பார்த்த வெளி உதவிகள் கிடைத்து மன நிம்மதி கிடைக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் திறம்பட செயல்பட்டு நல்ல பெயர் எடுக்க முடியும். உங்கள் உழைப்புக்கான ஊதியம் கிடைப்பது மட்டுமில்லாமல் அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருக்கும். பணியில் உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் எல்லாம் குறைந்து நிம்மதியுடன் பணியாற்ற முடியும். பயணங்கள் மூலமாக அனுகூலங்களை பெறுவீர்கள். சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் நெய் தீபம் ஏற்றுவது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் - 11, 12, 13.
சந்திராஷ்டமம் - 06-08-2022 பகல் 12.06 மணி முதல் 08-08-2022 பகல் 02.37 மணி வரை.

ரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு மாதகோளான சூரியன் 3-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட்டு பொருளாதார அனுகூலங்களை பெறுவீர்கள். 4-ல் புதன் சஞ்சரிப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று பொறுமையோடு செயல்படுவது நல்லது. கேது 6-ல் சஞ்சரிப்பதால் எந்த எதிர்ப்பையும் சமாளித்து ஏற்றங்களை அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் வேலையாட்கள் ஆதரவு மிகச் சிறப்பாக இருக்கும். அரசு வழியில் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகளை பெற முடியும். நீங்கள் போட்ட முதலீட்டை எடுப்பது மட்டுமில்லாமல் அதிகப்படியான லாபங்களை ஈட்ட முடியும். வெளியூர் தொடர்புகள் மூலம் தொழில் ரீதியாக ஒரு நல்ல செய்தி கிடைக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் மற்றவர்களால் முடிக்க முடியாத பணியை கூட நீங்கள் சிறப்பாக செய்து முடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். வேலை தேடி கொண்டிருப்பவர்களுக்கு பெரிய நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். சர்பேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது சிறப்பு. வெற்றி தரும் நாட்கள் - 7, 12, 13.
சந்திராஷ்டமம் - 08-08-2022 பகல் 02.37 மணி முதல் 10-08-2022 பகல் 02.58 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.
நிதானமான அறிவாற்றலும் சமயத்திற்கு ஏற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் ஆற்றலும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் செவ்வாய், ராகுவுடன் வார முற்பாதியில் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். பிரதான கிரகங்களான குரு, சனி வக்கிர கதியில் சஞ்சரிப்பதால் கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்த பொருளாதார நெருக்கடிகள் விலகி எதிர்பாராத அனுகூலங்களை பெறுவீர்கள். உடல் ரீதியாக இருந்த பிரச்சினைகள் ஓரளவுக்கு குறைந்து மன நிம்மதி ஏற்படும். உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது, கணவன்- மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வது சிறப்பு. பெண்கள் மூலமாக ஒரு சில அனுகூலமான பலன்களை அடைய முடியும். தொழில், வியாபாரத்தில் உங்களுக்கு இருந்த அரசு வழி நெருக்கடிகள் குறைந்து தொழிலில் நிம்மதியுடன் பணியாற்றுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடனிருப்பவர்கள் உதவிகரமாக இருப்பதால் கடினமான பணியை கூட சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கடந்த காலங்களில் நீங்கள் செய்த பணிக்கான சன்மானத்தை தற்போது பெற்று உங்கள் பொருளாதார பிரச்சினைகளை தீர்க்க முடியும். சிலருக்கு வேலை நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய ஒரு வாய்ப்பும், அதன் மூலம் பொருளாதார அனுகூலங்களும் ஏற்படும். பூர்வீக சொத்து ரீதியாக இருந்த பிரச்சினைகள் எல்லாம் கூட முடிவுக்கு வந்து மன நிம்மதி ஏற்படும். அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு.
வெற்றி தரும் நாட்கள் - 7, 8, 9.
சந்திராஷ்டமம் - 10-08-2022 பகல் 02.58 மணி முதல் 12-08-2022 பகல் 02.50 மணி வரை.

கடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.
எந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் பண்பு கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10, 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் கௌரவமான நிலை ஏற்படும். இருக்கும் இடத்தில் உங்களது மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். ஜென்ம ராசியில் சுக்கிரன், 2-ல் புதன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து அனைத்து விதமான தேவைகள் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். சூரியன் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதாலும், 7-ல் சனி சஞ்சரிப்பதாலும் கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்வது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் யோசித்து செயல்படுவது நன்று. தொழில், வியாபாரத்தில் சிறப்பான வாய்ப்புகள் கிடைப்பதால் போட்ட முதலீட்டை எளிதில் எடுக்க முடியும். ஒரு பெரிய மனிதரின் ஆதரவு கிடைப்பதால் நீண்ட நாட்களாக தீர்க்க முடியாத பிரச்சினைகள் எல்லாம் கூட வரும் நாட்களில் உங்களுக்கு சாதகமாக முடிவு வந்து மன அமைதி ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடன் வேலை செய்பவர்கள் சில இடையூறுகளை ஏற்படுத்தினாலும் நீங்கள் சிறப்பாக செயல்பட்டு நல்ல பெயர் எடுப்பீர்கள். நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் தற்போது கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. உங்கள் பேச்சுத் திறமையால் பணிபுரியும் இடத்தில் கௌரவமான நிலையினை அடைவீர்கள். தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் குங்கும அபிஷேகம், நெய் தீபம் ஏற்றுவது நன்று.
வெற்றி தரும் நாட்கள் - 8, 9, 10, 11.
சந்திராஷ்டமம் - 12-08-2022 பகல் 02.50 மணி முதல் 14-08-2022 மாலை 04.15 மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
இருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் புதன் சஞ்சரிப்பதால் சாமர்த்தியமாக செயல்பட்டு அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 6-ல் சனி சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலமான பலன்களை அடைய முடியும். சூரியன் 12-ல் மறைந்து இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டு எதிலும் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. குரு 8-ல் இருந்தாலும் வக்கிர கதியில் இருப்பதால் பணவரவில் இருந்த தேக்க நிலை மாறி தாராள பண வரவு ஏற்பட்டு உங்களின் அனைத்து விதமான குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். தடைப்பட்ட மங்களகரமான சுபகாரியங்கள் கூட தற்போது கைகூடுவதற்கான நல்ல சந்தர்ப்பங்கள் ஏற்படும். வயது மூத்தவரிடம் பேசுகின்ற பொழுது வீண் வாக்குவாதம் செய்யாமல் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் சந்தை நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நீங்கள் போட்ட முதலீட்டை எளிதில் எடுக்க முடியும். கூட்டாளிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் எதிர்பாராத அனுகூலங்களை பெறுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைத்து அதனை குறித்த நேரத்தில் செய்து முடிக்க கூடிய பலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவமான வாய்ப்புகள் கிடைக்கும். பணியில் இருந்த நெருக்கடியான நிலை மாறி சுமூகமான சூழ்நிலை உண்டாகும். உங்களின் தேக ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நன்று.
வெற்றி தரும் நாட்கள் - 10, 11, 12, 13.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.
பேச்சிலும் செயலிலும் முடிந்தவரை பிறர் மனதை புண்படுத்தாமல் செயல்படும் கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் உங்களது பலமும் வலிமையும் அதிகரிக்கும். பண வரவுகள் தேவைக்கேற்றவாறு இருந்து மன நிம்மதி உண்டாகும். 8-ல் சஞ்சரிக்கும் செவ்வாய், வரும் 10-ஆம் தேதி முதல் 9-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்குள்ள உடல் ரீதியான சிறு சிறு பாதிப்புகள் விலகும். குடும்பத்தில் நிலவிய தேவையற்ற கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். வண்டி, வாகனங்கள் மூலம் வீண் செலவுகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் எதிலும் கவனத்தோடு செயல்படுவது நல்லது. பிறருக்கு பண ரீதியாக வாக்குறுதி கொடுப்பதை தற்காலிகமாக தள்ளி வைப்பது சிறப்பு. தொழில், வியாபாரத்தில் புதிய யுத்திகளை பயன்படுத்தி அடைய வேண்டிய லாபத்தை அடைவீர்கள். அரசு வழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகளும் உத்தரவுகளும் தற்போது கிடைப்பதால் தொழிலை அபிவிருத்தி செய்ய முடியும். தகுதி வாய்ந்த வேலை ஆட்கள் தொழிலில் இணைவதால் உங்களுக்கு இருந்த வேலைபளு எல்லாம் குறையும். வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் சுமூகமான நிலை நீடித்தாலும் உடன் வேலை செய்பவர்கள் சில இடர்பாடுகளை ஏற்படுத்துவார்கள். அதிகாரியிடம் சுமூகமான உறவு இருப்பதால் எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்க கூடிய பலம் ஏற்படும். தூர பயணங்கள் மேற்கொள்கின்ற பொழுது சற்று பொறுமையோடு செல்வது நல்லது. சர்பேஸ்வர வழிபாடு மேற்கொள்வது, மகாவிஷ்ணு ஸ்தலங்களுக்கு சென்று வருவது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 7, 8, 13.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.
வசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட துலா ராசி நேயர்களே, ராசியாதிபதி சுக்கிரன், சூரியனுடன் 10--ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். புதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகவும் சிறப்பாக இருந்து உங்களின் கடந்த கால பொருளாதார நெருக்கடிகள் படிப்படியாக குறையும். நீங்கள் வாங்கிய கடன்களை தற்போது பைசல் செய்யக்கூடிய அளவிற்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குரு, சனி வக்கிர கதியில் இருப்பதால் உங்களுக்குள்ள பிரச்சினைகள் எல்லாம் பகலவனைக் கண்ட பனி போல படிப்படியாக குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். எதிலும் புது தெம்புடன் செயல்படுவீர்கள். உங்கள் ராசிக்கு 7-ல் ராகு, 7, 8-ல் செவ்வாய் இவ்வாரத்தில் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உடல் நலத்தில் அக்கறை செலுத்துவதும், குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்திற்கு சற்று முக்கியத்துவம் தருவதும் சிறப்பு. தொழில், வியாபாரத்தில் உங்களுக்கு இருந்த பொருள் தேக்கங்கள் விலகி நல்ல லாபகரமான நிலை ஏற்படும். வெளியூர் மூலமாக நீங்கள் எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு தற்போது மிகவும் அனுகூலமான காலம் என்றால் மிகையாகாது. அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் உங்களுக்கு இருந்த வேலைபளு எல்லாம் குறையும். நீண்ட நாட்களாக வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு ஒரு நல்ல நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரும். கந்த சஷ்டி கவசம் படிப்பது, முருக வழிபாடு மேற்கொள்வது, துர்க்கை அம்மனுக்கு ராகு காலத்தில் பூஜை மேற்கொள்வது சிறப்பு.
வெற்றி தரும் நாட்கள் - 8, 9.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடும் குணம் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன், 10-ல் புதன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபிட்சம், பொருளாதார அனுகூலங்கள் ஏற்படும். ராசியாதிபதி செவ்வாய் வார முற்பாதியில் 6-ல் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் பூர்த்தியாவதுடன் உங்களின் கடன் பிரச்சினைகளும் குறையும். குரு வக்ர கதியில் இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது, கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு 3-ல் சனி சஞ்சரிப்பது சிறப்பான அமைப்பு என்பதால் தொழில், வியாபாரத்தில் பல்வேறு அனுகூலமான பலன்களை பெறுவதுடன் நல்ல லாபங்களை அடைய முடியும். தொழில் வளர்ச்சிக்காக நவீனகரமான கருவிகளை வாங்கும் வாய்ப்புகள் ஏற்படும். கூட்டாளிகள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவதால் கடந்த காலங்களில் நிலவிய மன குழப்பங்கள் எல்லாம் ஓரளவுக்கு விலகி எதிலும் தெளிவுடன் செயல்பட முடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு பணிச்சுமை இருந்தாலும் அதற்கான ஆதாயங்கள் கிடைக்கும். நீங்கள் எடுத்த பணியில் சிறப்பாக செயல்பட்டு நல்ல பெயர் எடுப்பீர்கள். அதிகாரியிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் விலகி சுமூகமான சூழ்நிலை ஏற்படும். குடும்பத்திற்கு தேவையான நவீனகரமான பொருட்களை வாங்குவீர்கள். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றுவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 7, 11, 12.

தனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.
எல்லோருக்குமே மரியாதை கொடுக்கும் பண்பும் கள்ளம் கபடமின்றி ஆத்மார்த்தமாக பழகும் குணமும் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தனமான 9---ல் புதன் சஞ்சரிப்பதாலும் லாப ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களுடைய கஷ்டங்கள் சற்று குறையும். குறிப்பாக குரு, சனி வக்கிர கதியில் இருப்பதால் பணவரவுகள் சிறப்பாக அமையப்பெற்று பொருளாதார ரீதியாக அனுகூலங்களை பெறுவீர்கள். உங்கள் ராசிக்கு 5-ல் சஞ்சரிக்கும் செவ்வாய் வரும் புதன்கிழமை முதல் 6-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது உங்கள் பலத்தை அதிகரிக்க கூடிய அமைப்பாகும். ஜென்ம ராசிக்கு 5-ல் ராகு, 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் நலத்தில் அக்கறை செலுத்துவது, இயற்கை உணவுகளை உட்கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் கடந்த கால நெருக்கடிகள் சற்று குறைந்து உங்கள் உழைப்புக்கான பலனை அடைவீர்கள். சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக மாறுவதால் நீங்கள் போட்ட முதலீட்டை விட அதிகப்படியான லாபத்தை அடைய முடியும். புதிய ஆர்டர்களை தைரியத்தோடு எடுத்து குறிப்பிட்ட நேரத்தில் டெலிவரி செய்ய முடியும். தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நெருக்கடி இருந்தாலும் அதற்கான ஆதாயங்கள் கிடைக்கும். உடன் வேலை செய்பவர்களிடம் பேசுகின்ற பொழுது நிதானத்தோடு இருப்பதும், அதிகாரியிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விட்டு உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவதும் மிகவும் நல்லது. சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 8, 9, 13.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.
எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும் வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாத குணமும் கொண்ட மகர ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சனி, ஏழில் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் நலத்தில் கவனம் செலுத்துவது, கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்வது நன்று. பொருளாதார நெருக்கடிகள் காரணமாக மன அமைதி குறையும். சக்திக்கு மீறிய தேவையற்ற செலவுகள் ஏற்படும். எந்த செயல் செய்வதென்றாலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. உங்கள் ராசிக்கு 4-ல் சஞ்சரிக்கும் செவ்வாய் வரும் 10-ஆம் தேதி முதல் 5-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் வார பிற்பாதியில் ஒரு சில அனுகூலங்களை அடைவீர்கள். உங்கள் ராசிக்கு 5, 10-க்கு அதிபதியான சுக்கிரன் கேந்திர ஸ்தானமான 7-ல் சஞ்சரிப்பது சற்று சாதகமான அமைப்பு என்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். தொழில், வியாபாரத்தில் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு கிடைக்காது என்பதால் எந்த ஒரு வேலையிலும் நீங்கள் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால் தான் போட்ட முதலீட்டை எடுக்க முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு கூடுதல் வேலைபளு காரணமாக ஓய்வு நேரம் குறையும். அதிகாரிகள் சற்று சாதகமாக செயல்படுவதால் நீங்கள் எடுத்த பணிக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். சிறு சிறு உடல் உபாதைகளால் உங்களுடைய பணியில் சுறுசுறுப்பாக செயல்பட முடியாது. புதன்கிழமை மகாவிஷ்ணுவிற்கு துளசி மாலை சாற்றி வழிபாடு மேற்கொள்வது, ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது சிறப்பு.
வெற்றி தரும் நாட்கள் - 7, 11, 12.

கும்பம் அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்டிருந்தாலும் நியாய அநியாயங்களை பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சூரியன் வலுவாக சஞ்சரிப்பதாலும், 7-ல் புதன் சஞ்சரிப்பதாலும் பல்வேறு வளமான பலன்களை பெறுவீர்கள். 3-ல் வார முற்பாதியில் செவ்வாய், ராகுவுடன் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களுக்கு உடனிருப்பவர்களின் ஆதரவு மிகவும் திருப்திகரமாக இருக்கும். வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். குருபகவான் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் மட்டும் சற்று சிக்கனத்தோடு செயல்படுவது நல்லது. பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைப்பதால் நீண்ட நாட்களாக தீர்க்க முடியாத பிரச்சினைகளுக்கு தற்போது நல்ல தீர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டு நல்ல லாபத்தை அடைய முடியும். உங்களிடம் பகைமை பாராட்டியவர்கள் கூட தற்போது உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். கடந்த கால வம்பு வழக்குகள் முழுமையாக மறைந்து தொழிலில் நிம்மதியுடன் செயல்பட முடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி பெரிய அளவில் செய்ய நினைக்கும் செயல்களை தற்போதைக்கு தள்ளி வைப்பது நல்லது. வேலைக்கு செல்பவர்களுக்கு உங்கள் உழைப்புக்கான ஆதாயங்களை அடைவீர்கள். உடன் வேலை செய்பவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பதால் நீண்ட நாட்களாக முடிக்க முடியாத பணிகளை கூட தற்போது எளிதில் முடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றுவது மிகவும் சிறப்பு.
வெற்றி தரும் நாட்கள் - 7, 8, 9, 13.

மீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி.
தயாள குணமும், பொறுமையும் தன்னம்பிக்கையும் உடையவர்களாவும், திறமைசாலிகளாகவும் விளங்கும் மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குரு பகவான் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பணவரவுக்கு எந்த விதத்திலும் குறையில்லாமல் அனைத்து விதமான தேவைகளும் பூர்த்தியாகும். கடந்த கால நெருக்கடிகள் எல்லாம் முழுமையாக விலகி சேமிக்கும் அளவிற்கு உங்கள் பொருளாதார நிலையானது சிறப்பாக இருக்கும். தற்போது 2-ல் சஞ்சரிக்கும் செவ்வாய் வரும் 10-ஆம் தேதி முதல் 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் நிலவிய தேவையற்ற கருத்து வேறுபாடுகள் எல்லாம் மறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சைகள் மேற்கொண்டவர்களுக்கு தற்போது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சனி லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் உங்களுக்கு இருந்த நெருக்கடியான நிலை விலகி நற்பலன்களை பெறுவீர்கள். வேலையாட்களுடைய ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும் என்பதால் நீங்கள் தொழில், வியாபாரத்தில் புது தெம்புடன் செயல்பட்டு சந்தை சூழ்நிலையை சிறப்பாக சமாளித்து நல்ல லாபத்தை அடைய முடியும். அரசு வழியில் நீங்கள் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்த நெருக்கடியான நிலை மாறி பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். பிறரால் முடிக்க முடியாத பணிகளை கூட நீங்கள் தலையிட்டு எளிதில் முடித்து விடுவீர்கள். பயணங்கள் மூலமாக அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றுவது, உக்கிர தெய்வங்களை வழிபடுவது நன்று.
வெற்றி தரும் நாட்கள் - 9, 10, 11.

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,

தொடர்புடைய செய்தி