நிறுவனங்கள் பலநூறு கோடி கடன் வாங்கி தரமுடியவில்லை என்றால், அதில் சிறுபகுதி பாஜக -க்கு தேர்தல் பத்திரமாக கொடுத்தால் போதும், உடனே கடன் தள்ளுபடி செய்யப்படும். இதுவா பிரதமர் மோடியின் ஊழலற்ற அரசு என அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், "வருமானமே இல்லை, நாங்கள் நட்டத்தில் இருக்கிறோம்" என்று அறிக்கைகள் தாக்கல் செய்த நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான கோடிகள் எப்படி தேர்தல் பத்திரங்களின் வழியே பாஜக -க்கு நன்கொடை கொடுக்கின்றன? வெறும் பத்து கோடி லாபம் என்று கணக்கு காட்டிய நிறுவனம் எப்படி 184 கோடி நன்கொடை தருகிறது? இது அப்பட்டமான வரி ஏய்ப்பு இல்லையா? பாஜக செய்வது ஊழல் ஒழிப்பல்ல, அவர்கள் செய்வது ஊழல் ஒளிப்பு" என தெரிவித்துள்ளார்.