முல்லை பெரியாறு, காவிரி நதிநீர் பிரச்சனைகளில் பினராயி விஜயன், சிவகுமார் போன்றோர் தமிழகத்தை வஞ்சிக்கிறார்கள். நேற்று நடந்த கூட்டம் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் கூட்டம் அல்ல, வஞ்சிக்கும் கூட்டம். மற்ற மாநிலங்களில் மக்கள் தொகை எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் எம்.பிக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. நமது மாநிலத்தை பொறுத்தவரை தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என அமித்ஷா தெளிவாக கூறிவிட்டார் என தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.