தீப்பிடித்த லாரியை ஆற்றில் இறக்கி தீயை அணைத்த பொதுமக்கள்

83பார்த்தது
நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட செருவளூர் கிராமத்தில் விவசாயிகள் குறுவை சாகுபடி அறுவடை முடிந்த நிலையில் வயலில் உள்ள வைகோலை திருச்சி அருகே முசிறி பகுதிக்கு விற்பனை செய்வதற்கு லாரிகள் மூலம் வைக்கோல் கட்டுகளை ஏற்றினர்.
லாரியிலிருந்து முசிறிக்கு செல்ல முற்பட்ட போது செருவளூர் சாலையில் உள்ள மின்கம்ப ஓயரில் லாரியின் மேல் ஏற்றி வைத்திருந்த வைக்கோல் பட்டதில் தீ பற்றியது.
உடனே வைக்கோல் எரிய தொடங்கியது உடனே சாமர்த்தியமாக ஓட்டுநர் அருகில் உள்ள திருமலை ராஜன் ஆற்றில் எரிந்து கொண்டிருந்த லாரியோடு ஆற்றில் இறக்கினார்.
அப்போது அங்கு வந்த பொதுமக்கள் உடனடியாக ஆற்றில் உள்ள தண்ணீரை வாலி மூலம் எடுத்து லாரியை அணைத்தனர். வைகோளையும் ஆற்றில் தள்ளி விட்டனர்.
உடன் அப்பகுதி மக்கள் பேரளம் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீ பற்றி எரிந்த லாரியை அனைத்தனர். இருந்தபோதிலும் வைக்கோல் 20க்கும் மேற்பட்ட கட்டுகள் எரிந்து சாம்பலானது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி