நாகை: வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த நாகை எம்பி
வேதாரண்யம் பகுதியில் நாகை எம்பி வை. செல்வராஜ், திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினருடன் சென்று, வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா். தோப்புத்துறை, ஆறுகாட்டுத்துறை, ராமகிருஷ்ணாபுரம், அகஸ்தியம்பள்ளி, பூப்பெட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு திறந்த வாகனத்தில் சென்று, மக்களவைத் தோ்தலில் வாக்களித்த வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா். இந்நிகழ்வில், நகா்மன்றத் தலைவா் மா. மீ. புகழேந்தி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளா் சிவகுரு பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளா் சு. மா. செல்வராசு, வழக்குரைஞா் சங்கத் தலைவா் மா. மீ. அன்பரசு, காங்கிரஸ் கட்சி நிா்வாகி எஸ். கே. போஸ் உள்ளிட்ட திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.