பதினெட்டாம் நாள் நிகழ்வாக சப்தா வர்ணம் இன்று நடைபெறுகிறது

61பார்த்தது
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் பங்குனி திருவிழா கடந்த 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. 18 நாட்களும் ராஜகோபால சுவாமி பல்வேறு வாகனங்களில் பலவித அலங்காரங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

நேற்றைய தினம் திருத்தேரோட்டம் நடைபெற்ற நிலையில் 18 வது நாள் திருவிழாவான சப்தாவர்ணம் இன்று இரவு நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து நாளை முதல் விடையாற்றி விழாவும் இதன் நிறைவாக கிருஷ்ணர் தீர்த்த தெப்பம் 25 ஆம் தேதி இரவு நடைபெற உள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி