பாஜக சார்பில் தேசியக்கொடி இருசக்கர வாகன ஊர்வலம்

74பார்த்தது
மன்னார்குடியில் பாஜக சார்பில் தேசிய கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.

நாட்டின் 78வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் தேசிய கொடி அணிவகுப்பு ஊர்வலம் இன்று நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பேருந்து நிலையம் அருகே உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலையிலிருந்து தேசியக் கொடியுடன் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. பாஜக பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தேசியக்கொடியுடன் இருசக்கர வாகனத்தை ஒட்டி பேரணியை தொடங்கி வைத்தார். பெரிய கடை வீதி, பந்தலடி, ருக்மணி பாளையம் சாலை, வழியாக பேரணி தேரடி காந்தி சிலை அருகே நிறைவடைந்தது. அங்கிருந்த காந்தி சிலைக்கு பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தேசியக்கொடி ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான பாஜகவினர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி