மன்னார்குடியில் தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வுநிகழ்ச்சி

83பார்த்தது
திருவாரூர் மாவட்ட தொழில் மையம் மன்னார்குடி வர்த்தக சங்கம் இணைந்து நடத்திய தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மன்னார்குடியில் நடைபெற்றது. மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய உதவி பொறியாளர் சத்தியமூர்த்தி வணிகர் நல சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத்தலைவர் ஞானசேகரன், மன்னார்குடி வர்த்தக சங்கத் தலைவர் ஆர். வி. ஆனந்த், பொதுச்செயலாளர் அசோகன் பொருளாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் வர்த்தக சங்க துணை தலைவர் மகேந்திரன் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மையம் மூலம் பல்வேறு திட்டங்கள் மானியத்துடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் சுய வேலைவாய்ப்பு மற்றும் புதிதாக தொழில் தொடங்குபவர்கள் பழைய தொழிலை விரிவுபடுத்துபவர்கள் பொதுப் பிரிவினர் ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் பயன்படலாம் என தெரிவிக்கப்பட்டது நிகழ்ச்சியின் நிறைவாக வர்த்தக சங்க துணை தலைவர் ஐயப்பன் நன்றி கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி