நடிகர் விஜய் இல்லத்தை முற்றுகையிட போவதாக அறிவிப்பு

60பார்த்தது
முக்குலத்து புலிகள் கட்சியின் தலைவர் ஆறு. சரவணன் மன்னார்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் கொடியை நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள கட்சிக்கு பயன்படுத்தியுள்ளார் என குற்றம் சாட்டினார். வெள்ளாளர் முன்னேற்ற கழக கொடியில் உள்ள சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்திலேயே விஜய் கட்சியின் கொடியும் அமைந்துள்ளது. எங்களது கழக கொடியில் புலி சின்னமும் விஜய் கட்சிக்குடியில் யானை சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளது. தங்களது கொடியில் உள்ள நிறங்களே விஜய் கட்சி கொடியிலும் இருக்கிறது. இதனால் மக்களுக்கு கொடி அடையாளம் காண்பதில் குழப்பம் ஏற்படும். கடந்த பல ஆண்டுகளாக கிராமங்கள் தோறும் தங்கள் கழக கொடியை ஏழை எளிய மக்களிடம் கொண்டு சேர்க்க நிர்வாகிகள் தொண்டர்கள் கடினப்பட்டு உழைத்து உள்ளனர். நடிகர் விஜய் அவர் நடிக்கும் படங்களில் பிற மொழி கதைகளையும் சினிமாக்களையும் காப்பி அடித்து நடிப்பது போல் தனது கட்சி கொடியின் நிறங்களையும் பிற அமைப்பின் கொடிகளில் இருந்து பயன்படுத்தியுள்ளார் வெள்ளாளர் முன்னேற்ற சங்க கொடியை விஜயின் கட்சி பயன்படுத்தியது தொடர்பாக வழக்கு தொடர் இருப்பதாகவும் உரிய தீர்வு கிடைக்காத பட்சத்தில் வெள்ளாளர் முன்னேற்ற கழகம், முக்குலத்து புலிகள் கட்சி இணைந்து நடிகர் விஜயின் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி