கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

61பார்த்தது
கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் பகுதியில், திருவள்ளூர் காவல் நிலைய போலீசார் நேற்று முன்தினம் அதிகாலை ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் சாலையோரம் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த அஜீத், 28, என்பது தெரிய வந்தது. அவரது பேன்ட் பாக்கெட்டிலிருந்து 200 கிராம் எடை கொண்ட கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிந்த திருவள்ளூர் தாலுகா போலீசார், அஜீத் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி