பெண்களுக்கு 500 ரூபாய் நோட்டுகள் அளித்த பாஜக நிர்வாகி.

2598பார்த்தது
திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதி பாஜக வேட்பாளர் பொன். வி. பாலகணபதி பொன்னேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் தீவிர வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு தாமரை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு வாக்கு சேகரித்து வருகிறார். இந்நிலையில் மாலை ஆரம்பாக்கம் அருகே நொச்சிகுப்பம். பாட்டை குப்பம் உள்ளிட்ட மீனவ பகுதிகளில் ஏளாவூர் மாதர்பாக்கம் நாகராஜ கண்டிகை ஆத்துப்பாக்கம் உள்ளிட்ட சுமார் பத்துக்கும் மேற்பட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தீவிர வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

இதை அடுத்து ஆரம்பாக்கம் பஜார் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்ட நிலையில் பிரச்சாரம் முடிந்து சென்ற போது பிரச்சாரத்திற்கு வந்த பெண்களுக்கு பாஜக நிர்வாகி ஒருவர் தோளில் பாஜக கட்சி துண்டனிந்து பெண்களை வரிசையில் நிற்க வைத்து 500 ரூபாய் தாள்களை கொடுத்து ஐந்து நபருக்கு ஒரு 500 ரூபாய் என பிரித்து எடுத்துக் கொள்ளுமாறு வழங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் பிரச்சாரத்திற்கு வந்த பெண்களுக்கு பணப்பட்டுவாடா செய்த சம்பவம் மற்ற கட்சியினுடைய பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது இது போன்று பண பட்டுவாடா செய்யும் கட்சிகள் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி