அமேசான் பார்சலில் கஞ்சா கடத்தல்

60பார்த்தது
அமேசான் பார்சலில் கஞ்சா கடத்தல்
நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் தேர்தல் அதிகாரிகள் வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர். இதனால், குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்த நிலையில் ஒரிசாவில் இருந்து ஹைதராபாத்திற்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, நேற்று (ஏப்ரல் 11) அமேசான் பார்சல் மூலம் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 2 இளைஞர்களை தெலங்கானா போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அந்த அமேசான் பார்சலில் இருந்த 2 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி