உடல் நலக்குறைவால
் பாதிக்கப்பட்டுள்ள, வேலையில்லாத முன்னாள் கணவருக்கு மனைவி மாத பராமரிப்பு தொகையாக ரூ.10,000 வழங்க வேண்டும் என மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. வங்கி மேலாளராக பணிபுரிந்து வந்த அந்தப் பெண், 2019ல் பணியில் இருந்து ராஜினாமா செய்து விட்டதாக கூறி, ராஜினாமா கடிதத்தை காண்பித்த பிறகும் அவரின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்து, முன்னாள் கணவருக்கு ஜீவனாம்சம் கொடுக்க உத்தரவிட்டுள்ளது.