ஈரோடு தொகுதியில் உள்ள தனியார் குடோனில் பறக்கும் படை நடத்திய சோதனையில் 24,150 புடவைகள் 161 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அதிமுக வேட்பாளர் அசோக்குமாருக்காக அவை மறைத்து வைக்கப்பட்டது தெரிந்தது. புடவைகளை வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது. இதை எதிர்த்து குடோன் உரிமையாளர் பாக்கியலட்சுமி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் அவரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.