குற்றாலத்தில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு - ஹாப்பியான உள்ளூர்வாசிகள்

61பார்த்தது
குற்றாலத்தில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு  - ஹாப்பியான உள்ளூர்வாசிகள்
தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் தென்காசி மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல்11) இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. சுமார் அரை மணிநேரமாக பெய்த இந்த கனமழையால் இன்று குற்றாலத்தின் முக்கிய அருவிகளான பழைய குற்றாலம், ஐந்தருவி, மெயின் அருவி ஆகியவற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக அருவிகளில் குளிக்க சுற்றுலாவாசிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க உள்ளூர்வாசிகள் அருவியில் ஹாப்பியாக குளிக்கத் தொடங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி