பெண்களுக்கு புடவைகள் வழங்கும் நிகழ்ச்சி

552பார்த்தது
தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் 1000 ஏழை எளிய தாய்மார்களுக்கு புடவைகள் வழங்கும் நிகழ்ச்சியும், சிறுவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியும், எம். என். கண் மருத்துவமனையுடன் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமும் சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் எஸ். சுதர்சனம் தலைமையில் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஊராட்சி பவானி நகரில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சோழவரம் தெற்கு ஒன்றிய செயலாளரும் சோழவரம் ஒன்றிய துணைப் பெருந்தலைவருமான மீ. வே. கர்ணாகரன் முன்னிலை வகித்தார். சோழவரம் தெற்கு ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் ஜெ. மைக்டைசன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் நா. பரசுராமன், சோழவரம் தெற்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் என். முகம்மது அலி, ஒன்றிய கவுன்சிலர் மாலதி மகேந்திரன், பவானிநகர் கிளை செயலாளர் எம். ஜி. கார்த்திக், பவானி நகர் குடியிருப்போர் நலச் சங்கத் தலைவர் எஸ். ஜோசப், தணிக்கையாளர் ஏ. ஜோசப், கௌரவ தலைவர் எஸ். ஏ. ஜோசப், எம். முகம்மது ரஃபீக், பவானி சதீஷ், எம். ஏ. முத்து மீரான், எஸ். ரமேஷ், அந்துவான் சத்தியநேசன், கிளைச் செயலாளர்கள் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி, கிளை கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி