தர்மபுரி அருகே மிட்டாரெட்டிஅள்ளி பகுதியில் காணாமல்போன 10 வயது சிறுவன் தேடப்பட்டு வந்த நிலையில், கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மன்மதன் – சீதா தம்பதியின் 10 வயது மகன் நேற்று காணாமல் போனது குறித்து இளங்கோ என்ற இளைஞரை சந்தேகத்தில் பேரில் போலீஸ் விசாரணை செய்து வந்தது. இளங்கோ, சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்து கிணற்றில் தள்ளிவிட்டது போலீஸ் விசாரணையில் அம்பலமானது. சிறுவனை கொன்று நாடகமாடிய இளங்கோவை கைது செய்து அதியமான் கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.