டெல்லியில் பயங்கர தீ விபத்து - 4 பேர் பலி

52167பார்த்தது
தலைநகர் டெல்லியில் உள்ள ஷாஹ்தாரா பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. நான்கு தளங்கள் மற்றும் வாகன நிறுத்துமிடம் கொண்ட இந்த கட்டிடம், இன்று அதிகாலை தீப்பிடித்தது. உள்ளூர் காவல்துறை, தீயணைப்புப் படை, ஆம்புலன்ஸ் மற்றும் PCR வேன்கள் தகவலறிந்து அங்கு விரைந்தன. 9 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மீட்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி