ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்

1557பார்த்தது
பெருநகர சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், புழல் அண்ணா நினைவு நகரில் தனியாருக்கு சொந்தமான வண்ண மீன் வளர்ப்பு மையம் உள்ளது. இங்கு ஏற்கனவே 4 ஆழ்துளை கிணறுகள் உள்ள நிலையில், மீண்டும் இங்கு ஆழ்துளை கிணறு அமைக்க போர்வெல் வாகனம் வந்து பணிகளை துவங்கியுள்ளது. அப்போது அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்பு வாசிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர் சேட்டு, ஆலன் மோகன், காந்தி, இன்பராஜ், சாம்ராஜ் உள்ளிட்டோர் இங்கு ஆழ்துளை கிணறு அமைப்பதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகும் எனவே ஆழ்துளை கிணறு அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த புழல் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் ராஜா சிங் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சமரசம் பேசியதில் போராட்டம் கைவிடப்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி