நெல்லை மாவட்டம் காடன்குளம் கவுன்சிலர் கிருஷ்ணன் என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் இன்று மாலை புள்ளிமான் ஒன்று தவறி விழுந்தது. இதையடுத்து தீயணைப்புத்துறை மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று இளைஞர்கள் உதவியுடன் அந்த புள்ளிமானினை காயம் இன்றி மீட்டனர். அந்த மானுக்கு சுமார் ஒரு வயது இருக்கும் என தெரிகிறது. மீட்கபட்ட மானை கங்கைகொண்டான் புள்ளிமான் சரணாலயத்தில் பாதுகாப்பாக கொண்டு விட்டனர்.