மேலப்பாளையத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்

571பார்த்தது
மேலப்பாளையத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்
மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் நிதி உதவியுடன் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, நிவ்யா நெஞ்சக நோய்கள் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை, மேலப்பாளையம் அன்வாருல் ஹுதா பள்ளிவாசல் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம், இரத்த அழுத்தம், சர்க்கரை நோயின் அளவு கண்டறிதல் முகாம் மேலப்பாளையம் காட்டு செக்கடி 2-வதுதெருவில் உள்ள பள்ளிவாசலில் வைத்து இன்று காலை நடைபெற்றது. அன்வாருல் ஹீதா பள்ளிவாசல் தலைவர் முகமது சாலி தலைமை தாங்கினார். செயலாளர் காதர் மொய்தீன், துணைத் தலைவர் சிந்தா சேட், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமினை 44-வது வார்டு கவுன்சிலர் ஹாபீஸ் முகைதீன் அப்துல் காதர் துவக்கி வைத்தார். முகாமில் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர் டாக்டர் அஞ்சு இலவசமாக கண் பரிசோதனைகளை மேற்கொண்டார். வண்ணாரப்பேட்டை நிவ்யா நெஞ்சக நோய்கள் மற்றும் பல்நோக்கு மருத்துவமனையின் மருத்துவர்கள் நிவ்யா, மற்றும் ப்ரீத்தி ஆகியோர் இலவசமாக இருதய பரிசோதனையை மேற்கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை நாமியா அசன் மைதீன், பீர் முகைதீன், காதர் அலி, முகமது கான், முகமது உசேன், ஆலிம், அன்வர், அகமது ஹாஜி, யாசர், யூனுஸ், சித்திக், ஹயாத், அக்தர், மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை முதன்மை முகாம் மேலாளர் ஆசை மாணிக்கம், விழி ஒளி ஆய்வாளர் இந்திரா உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் பலர் பயன்பெற்றனர்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி