கடற்கரைகளில் கரை ஒதுங்கிய மர்மப் பொருள்!

71பார்த்தது
கடற்கரைகளில் கரை ஒதுங்கிய மர்மப் பொருள்!
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள பிரபல போண்டி கடற்கரை உள்பட பல கடற்கரைகளில் மக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரை மணல் பரப்புகளில் சந்தேகத்துக்குரிய கருப்பு நிற பந்து போன்ற பொருள்கள் ஒதுங்கியதால் பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.கரை ஒதுங்கிய மர்ம பொருள்களை தன்னார்வலர்கள் மூலம் அப்புறப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கரையொதுங்கியவை தார் பந்துகள் என முதற்கட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி