உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு இன்று (ஏப். 28) பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கில் காவேரி மருத்துவமனை சார்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் பேராசிரியர் ஞானசம்பந்தன் நடுவராக கலந்து கொண்டு பட்டிமன்றத்தை நடத்தினார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பட்டிமன்றத்தை கண்டு ரசித்தனர். இதற்கான ஏற்பாட்டை காவேரி மருத்துவமனை நிர்வாகிகள் செய்திருந்தனர்.