தெரு நாய்களின் தொல்லை; மக்கள் அச்சம்

75பார்த்தது
திருநெல்வேலி மாநகராட்சி 32வது வார்டுக்கு உட்பட்ட மாருதி நகர், சுப்பிரமணியபுரம் பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. இங்கு தெரு நாய்கள் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக பெருகிவிட்டதால் அவை சாலைகளில் கும்பலாக சுற்றி பொதுமக்களை அச்சுறுத்துகின்றன. தனியாக சிக்கிக் கொள்ளும் ஆடு, கோழிகளை கடிக்கவும் செய்கின்றன. எனவே இவற்றை மாநகராட்சி கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி